தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது
புத்தகக்கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக்கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜனவரி, 2015

பள்ளிமாணவ,மாணவிகளுக்கான திறனாய்வுப்போட்டிகள்

தலைமையுரை:ஏ.பிரம்மநாதன்,பல்லடம் கோட்டப்பொறியாள்ர்
வரவேற்புரை:முருகசாமி
மாணவர்களின் ஒரு பகுதி
பள்ளியின் ஆசிரியர், உரை

புதன், 14 ஆகஸ்ட், 2013

திருப்பூர் புத்தகக்கண்காட்சி

திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL ஊழியர் சங்கம், மற்றும் பின்னல் புத்தகாலயம் ஆகியவைகள் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.12-08-2013 அன்று பல்லடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நமது துறை சம்பந்தமாக சிம் விற்பணை மேளாவும் நடத்தப்பட்டது. புத்தகக்கண்காட்சியில் பல்லடம் [ 12-08-2013 ] மற்றும் திருப்பூரில் [14-08-2013 ] தலா ரூ.20,000 க்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. தொழிலாளர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக இருந்தது. திருப்பூரில் நடந்த கண்காட்சியில் நமது துறையின் துணைப்பொதுமேலாளர். திரு.ராமசாமி, அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். . உடுமலை தளியில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ. 12,000 /- ம், வெள்ளக்கோவில் நடந்த புத்தககண்காட்சியில் ரூ. 15,000 /- ம் விற்பனையானது. புத்தககண்காட்சியை நடத்திய தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் மனதார பாராட்டுகிறது.

வெள்ளி, 5 ஜூலை, 2013

கோவை புத்தகக்கண்காட்சி



கோவையில் உள்ள முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில் 05-07-2013 அன்று நமது BSNL ஊழியர் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து புத்தககண்காட்சியை நடத்தினர்.இந்த புத்தக விற்பனையை முதன்மை பொதுமேலாளர்.திரு. ஷாஜஹான், ITS அவர்கள் துவக்கி வைக்க முதல் விற்பனையை கீதா உணவக உரிமையாளர் திரு.N. தேவராஜன் பெற்றுக்கொண்டார். தோழியர்.சூரியகலா அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் , BSNLEU மாநிலத்தலைவர் தோழர். K. மாரிமுத்து மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர். V.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தகண்காட்சியை திரு. P.ரத்தினசாமி,DGM[A], திரு வெங்கடாசலம்,DGM[F], திரு உஸ்மான் அலி,AO, , தோழர்.C. ராஜேந்திரன்,DS, BSNLEU ஆகியோர் வாழ்த்தி பேசினார்.தோழர்கள் A.கனகராஜ், P.சின்னதுரை, P.சுந்தரம், ராபர்ட் ஆகியோர் ஆயிரம் ரூபாய்க்குமேல் புத்தகங்களை வாங்கினார். அன்று ஒரு நாளில் ரூ.21,500 /-க்கு புத்தக விற்பனையை நடத்திய கிளைச்செயலர்,M.மதனகோபால் உள்ளிட்ட தோழர்களை மாவட்டச்சங்கம் மனதார பாரட்டுகிறது