தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 14 ஆகஸ்ட், 2013

திருப்பூர் புத்தகக்கண்காட்சி

திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL ஊழியர் சங்கம், மற்றும் பின்னல் புத்தகாலயம் ஆகியவைகள் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.12-08-2013 அன்று பல்லடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நமது துறை சம்பந்தமாக சிம் விற்பணை மேளாவும் நடத்தப்பட்டது. புத்தகக்கண்காட்சியில் பல்லடம் [ 12-08-2013 ] மற்றும் திருப்பூரில் [14-08-2013 ] தலா ரூ.20,000 க்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. தொழிலாளர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக இருந்தது. திருப்பூரில் நடந்த கண்காட்சியில் நமது துறையின் துணைப்பொதுமேலாளர். திரு.ராமசாமி, அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். . உடுமலை தளியில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ. 12,000 /- ம், வெள்ளக்கோவில் நடந்த புத்தககண்காட்சியில் ரூ. 15,000 /- ம் விற்பனையானது. புத்தககண்காட்சியை நடத்திய தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் மனதார பாராட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக