பீளமேட்டில் 07-08-2015 அன்று நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவில் பீளமேடு மூத்த தோழர்.செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுவிழா, பீளமேடு கோர்ட் கேஸ் வெற்றி விழா மற்றும் வழக்கறிஞருக்கு பாராட்டு விழாவாக அமைந்தது..மேலும் கோவை நடைபெறும் விரிவடைந்த மாநிலச்செயற்குழுக்கூட்டத்திற்கு நன்கொடையாக பல கிளைகளும்,பல தோழர்களும் வாரிவழங்கினார்கள் என்பது பாராட்டுக்குரிய அம்சமாகும். பீளமேடு கிளை தோழியர்.நாகம்மாள் அவர்கள் மாவட்டசெயற்குழுவிற்கு ரூ.1000-ம் மற்றும் மாநில செயற்குழுவிற்கு ரூ.1000/- வழங்கியது பாராட்டுகுரியதாகும்.ஓய்பெற்ற தோழர்.செல்வராஜ் அவர்கள் மாவட்ட செயற்குழுவிற்கு ரூ.3000/ம் ,மாநில, மத்திய சங்கங்களுக்கு தலா ரூ. 500/ -ம் மாநில செயலரிடம் வழங்கினர். விபரங்கள் அறிக்கையாக வெளிவரும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக