தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 9 நவம்பர், 2018

AUAB தலைவர்கள் கூட்ட முடிவுகள்

AUAB  கோவை மாவட்டம்

14-11-2018  -பேரணியில் பங்கேற்போம்

தோழர்களே ! தோழியர்களே ! தோழமை வணக்கம்.

AUAB  மத்திய அமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் தர்ணா போராட்டங்கள் நம் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.இதன் தொடர்ச்சியாக  வரும் 14-11-2018 புதன்கிழமை அன்று  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் பேரணி கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் இருந்து துவங்கி ரேஸ்கோர்ஸ் தொலைபேசி நிலையத்தில் நிறைவடைய உள்ளது.அங்கு கோவை மாவட்ட PGM திரு.முரளிதரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. இது பற்றி இன்று நடந்த AUAB  கோவை மாவட்ட கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு 
1) AUAB  தலைவராக தோழர் ஏ.ராபர்ட்ஸ் ,மாவட்ட செயலர் NFTE BSNL அவர்களும் , கன்வீனராக தோழர்.சி.ராஜேந்திரன் ,மாவட்ட செயலர். BSNLEU  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
2) பேரணியில்  1000 தோழர்களை பங்கேற்க வைப்பது எனவும்.இதற்காக அனைத்து கிளைகளிலும் அனைத்து சங்க பிரதிநிதிகள் இணைந்து பிராச்சாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது
3) பேரணி சரியாக 14-11-2018 மாலை 04.00 மணிக்கு துவங்கி 05.00 மணிக்கு நிறைவடையும் .அங்கு சிறப்புக்கூட்டம் நடைபெறும் .பேரணியை முன்னனி தோழர்களை கொண்ட குழு வழிநடத்தும்.
தோழமையுள்ள 
ஏ.ராபர்ட்ஸ்                                                    சி.ராஜேந்திரன்
                              தலைவர்                                                         கன்வீனர்

குறிப்பு : பேரணி நோட்டீஸ் சங்க அலுவலகத்தில் உள்ளது. முன்னனி நிர்வாகிகள் மாவட்ட சங்கத்தை அணுகி பெற்றுக்கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக