தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 10 டிசம்பர், 2013

வாழ்த்துக்கள்

அவினாசி   [09-12-2013]  நடந்த BSNLEU& TNTCWU   சங்கங்களின் இணைந்த கிளை மாநாட்டில்  தோழர்.கனேசன், தலைமை தாங்கினார். பல்லடம் கோட்டப்பொறியாளர். திரு .ஆறுமுகம் , சேவை கருத்தரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவினாசி துனைக்கோட்டப்பொறியாளர் திருமதி . ராணி அவர்கள் வாழ்த்துரை வழங்கி நம் சங்கத்தை சார்ந்த ஒவ்வொரு தோழர்களின் பங்களிப்பை தனிதனியாக கூறி சேவை நம் சங்க உறுப்பினர்களின்  பணியை பாராட்டிப்பேசினார். பின்பு சிறப்புரை ஆற்ற வந்த நமது மாவட்டசெயலர். சி.ராஜேந்திரன் அவர்கள் நமது சங்கம் செய்துள்ள சாதனைகளை விளக்கி பேசினார்.. மாநில உதவிச் செயலர். தோழர்.சுபிரமணியம் , மாநில அமைப்பு செயலர். தோழர். முகமது ஜாபர், பல்லடம் கிளைச்செயலர். தோழர். நாகராஜன் ஆகியோர்   ஆகியோர் வாழ்த்திபேசினர்.   பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர். சம்பத்குமார்.TM, அவர்கள தலைவராகவும்
தோழர்.கிருஷ்ணன் உண்ணி , TM அவர்கள் ,செயலராகவும்
தோழர். பழனிச்சாமி, TM ,அவர்கள் பொருளாளராகவும்    தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாவட்டசங்க நிர்வாகிகள் தோழர்கள் சதிஸ், காந்தி, முருகசாமி மற்றும் கே.பி. புதூர்.கிளைச்செயலர். ஜோதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் 29 தோழர்கள் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக