தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 9 நவம்பர், 2018

ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்

BSNLEU  & TNTCWU  சங்கங்கள் சார்பாக மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கலோடு சங்கபிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியோடு நடைபெற்றது.இதில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினார்கள். ரூ.7000 /- போனஸ் ,விடுபட்ட சம்பளம், நடப்பு மாத சம்பளம் மற்றும் நிலுவை தொகை ஆகியவைகளை பண்டிகைக்கு முன் வழங்குவதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது.விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவும் முடிவுகளை அமலாக்காத ஒப்பந்ததார்ரகள் மேல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .
சி.ராஜேந்திரன் ,மாவட்ட செயலர், என்.பி.ராஜேந்திரன், மாநில அமைப்பு செயலர், எஸ்.சுப்பிரமணியம், மாநில உதவிச்செயலர்,ஏ.முகமது ஜாபர், மாவட்ட தலைவர், என்.சக்திவேல் ,மாநில அமைப்பு செயலர்,செள .மகேஸ்வரன், ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் நிர்வாகிகள் வடிவேல், சண்முக சுந்தரம், கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக